படித்ததில் பிடித்தது

பாரதியார் பாடல்கள் - 1
  
நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
   இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
   முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
   சிறந்ததும் மிந்நாடே ‍- இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
   வாயுற வாழ்த்தேனோ - ‍இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
   என்று வணங்கேனோ!

2 comments:

  1. அடிமைத்தளையை அழித்தொழிக்க கவிதை புனைந்த தமிழ் காவிய நாயகன். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. மகாகவியின் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. வாசிக்கும் போதெல்லாம் ஒருவித புத்துணர்ச்சியை நம்முள் உருவாக்குகிறது.

      Delete