கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா?


இணைய நண்பர்களுக்கு வணக்கம். 

சில நாட்களாகவே என்னுடைய பதிவுகளில் சிறுகதைகளும், சமூகப் பார்வை பற்றிய பதிவுகளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. இவ்வழக்கத்திற்கு மாறாக சங்கத்தமிழின் சுவையை இணைய நண்பர்களுடன் பகிரலாம் எனத் தோன்றியது, அதன் பொருட்டு எழுந்ததே இப்பதிவு - ``ூல் நாற்பது தெரியுமா?’’.

நம்மில் பெரும்பாலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி அறிந்திருப்போம். அதில் முதல் நான்கு நூல்களைப் பற்றி இங்கு காண்போம்.

               1)     இன்னா நாற்பது
               2)     இனியவை நாற்பது
               3)     கார் நாற்பது
               4)     களவழி நாற்பது

இந்நான்கு நூல்களுக்குமிடையில் உள்ள ஒற்றுமை யாதெனில், இந்நான்கும் நாற்பது பாடல்/செய்யுள்களைக் கொண்ட தொகுப்பு ஆகும்.  

(நூல்ாற்பில் மில் வுவு `இன்னா`, ஏன் கார் நாற்பையோ அல்லு கி நாற்பில் வைக்கில்ை?)



உள்ளடக்கம்
ஆசிரியர்
இன்னா நாற்பது
அறம் பற்றியது
துன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது
கபில தேவர்
இனியவை நாற்பது
அறம் பற்றியது
இன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது
பூதஞ் சேந்தனார்
கார் நாற்பது
அகம்
கார் காலத்தின் தோற்றம் பற்றிக் கூறுவது
கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது
புறம்
போர்க்களம் பற்றிக் கூறுவது
பொய்கையார்
 
 

இந்நூட்களில் குறிப்பிட்டுள்ள பாடல்களை எடுத்துக்காட்டுடன் இங்குப் பார்ப்போம்.
  
            1) இன்னா நாற்பது – பாடல் மூன்று

``கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு’’

விளக்கம்:

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம்
தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம்
வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம்
உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.

       2)  இனியவை நாற்பது – பாடல் ஒன்று

``பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு’’

விளக்கம்:

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது
அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது
அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

      3) கார் நாற்பது – பாடல் ஒன்று

தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது.

``பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?’’

விளக்கம்:

கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல,
இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க
வருவேன் என சொல்லிப்போன தலைவர்,
மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ?

      4) களவழி நாற்பது – பாடல் மூன்று

``ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
 இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து.’’

விளக்கம்:

இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.


சிலேடை-2

காட்டு வழியில் சென்றுகொண்டிருந்த இரு தமிழ்ப்புலவர்களின் உரையாடல் இதோ –
 
நடந்து சென்று கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு. அவர் மற்ற புலவரிடம்,"ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது, என் செய்ய?" என்று கேட்டார். அதற்கு அடுத்தவர்,

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்"

என்று பதிலுரைத்தார்.

இங்கே பத்துரதன் என்றது தசரதன் (பத்து = தசம்)
தசரதனின் புத்திரன் என்றது இராமன் (புத்திரன் = மகன்)
இராமனின் மித்திரன் என்றது சுக்ரீவன் (மித்திரன் = நண்பன்)
சுக்ரீவனின் சத்துரு என்றது வாலி (சத்துரு = எதிரி)
வாலியின் பத்தினி என்றது தாரை (பத்தினி = மனைவி)
தாரையின் கால் என்றது தாரை என்ற சொல்லில் உள்ள கால் (ா)

மேற்கூறிய வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான இராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை என்றாகும்.

மேற்கூறிய வாசகத்தின் உட்பொருள், முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பதே.

சிலேடை-1 ஐப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.