நீ ‍ தமிழனா? ‍

(இது ஒரு தமிழனின் உள்ளக் குமுறல்)

என்ன செய்தாய் நீ ‍ ‍தமிழனாகப் பிறந்து !
குற்றம் நடந்தது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது  தமிழ்ப் பாட நூலின் முதல் பக்கத்திலேயே முடிய வேண்டுமாதமிழ் என்பது வெறும் 100 மதிப்பெண் பாடமாக மட்டுமே இருக்க வேண்டுமா?  Twitter/facebook/iphone தெரிந்த நமக்கு, அகநானூறு/புறநானூற்றுப் பாடல்களை ஒரு முறையாவது வாசித்திருப்போமா? பாரதி(யார்)  யார்? ஔவை (யார்)  யார்? வ்வினா நம் வாரிசுகளிடமிருந்து வரும் முன் விழித்தெழ வேண்டாமாஇவையனைத்தும் நான் என்னுள்ளே வினவும் வினாக்கள்.

மழலைகள் நடைமுறைப் பழக்க வழக்கங்களை பெற்றோர்களிடமிருந்தும், சுற்றத்தினிடமிருந்துமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அத்தகைய பொறுப்பிலிருக்கும் நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்தத் தவறிவிட்டதாக உணர்கிறேன்.

யோசித்துப் பார்த்தால், என் குழந்தையின் தமிழ்வழிக் கல்வி கேள்விக்குறியே என்ற உண்மை புரிகிறது. இதற்குக் காரணம் நான் வெளி/வடநாட்டில் வசிப்பதனாலா? இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளை பாராட்டும் நாம், நம் தாய்மொழியின் சிறப்பைக் கூற மறந்தோமே! தாய்மொழிக்கல்வியா அல்லது ஆங்கில வழிக்கல்வியா (பிறமொழி வழிக்கல்வி) என்பது அவரவர் சொந்த விஷயம். அதை நான் இங்கு முன்வைக்கவில்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும்  என்றே வலியுறுத்துகிறேன்.  இதுவே தற்போது என்னுள் பரவியுள்ள ஐயம்.

யோசித்துப் பாருங்கள் !!

தந்தையாக நானும், தாயாக என் மனைவியும், என்னைப் போல் தொலைவிலிருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் !

நான் யாரையும் வெண்பா எழுதச் சொல்லவில்லை அல்லது அதற்கான விளக்கமும் கேட்கவில்லை ! அனைவரையும் ஒரு முறையாவது தமிழ் இலக்கியங்களை வாசிக்கப் பணிக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இத்தகைய  இணையதள வசதிகள் இல்லை. நூல்கள் எங்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இன்று பெரும்பாலான தமிழ்ப்புத்தகங்கள் இணையதளத்தில் (மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம்) இலவசமாகக் கிடைக்கின்றன. அதற்கான முயற்சிகளும் நடைபெற்றுருகின்றன. வாசிக்க நமக்கு விருப்பமா?

முந்தைய பதிவுகளில் அதற்கான இணையதள முகவரிகளை குறிப்பிட்டுள்ளேன்.

நான் எனது புத்தகம் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தமிழில் நான் வாசித்த முதல் புத்தகம் மறைந்த எழுத்தாளர் திரு. சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்', இன்றும் நினைவில் உள்ளது.  பின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மணிபல்லவம், கடல் புறா, பாரதியார் கவிதைகள்உரைநடைகள் என்று வாசிக்கத் தொடங்கினேன். 

அன்று தொடங்கிய நான் இன்றுவரை புத்தக வாசிப்பை முடக்கவில்லை. அதிலிருந்து சிறது சிறிதாக சங்க இலக்கியங்களையும், வரலாற்றுப் புதினங்களையும் படிக்கும் முயற்சி தொடங்கிற்று. பின் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி படிக்கும் ஆர்வம் பிறந்தது. இன்றைய இணைய தளத்தின் உதவியால் தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம்  ஆகிய வரலாற்றச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். தமிழினத்தின் மரபுபண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை உணரத் தொடங்கினேன். அன்றிலிருந்துதான் நம் தமிழின் சிறப்பை உணர்ந்தேன். இத்தகைய தொன்மையான, செம்மையான தமிழ் மொழியின் சிறப்பை நாம் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும்.  இது நம் அனைவராலும் இயலக்கூடிய ஒன்றே!!

இந்தப் பதிவின் மூலம் நான் எந்த ஒரு தனிநபரையும் குறைகூறவில்லை. நாம் என்ன செய்ய வேண்டுமென்ற கருத்தையே விளிக்கிறேன். தமிழில் இன்னும் நான் படிக்க வேண்டியவை, தெரிந்துகொள்ளவேண்டியவைகள் மிகுதியாக உள்ளன. தமிழை (தமிழில்) படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. தமிழ் நூல்கள் சேகரிப்பைத் தொடங்கியுள்ளேன். வருங்காலத்தில் இன்னும் எனக்குத் தெரிந்த பல அறிய தகவல்களை இவ்வலைப்பூவில் பகிர்வேன்.

முடிவில் தமிழின் இனிமையிலிருந்து நாம் விழகிச் செல்கின்றோமோ என்ற ஐயப்பாடு இருந்தாலும், நாமனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நம்பிக்கை உள்ளது, ப்பதிவினை வாசிக்கும் வாசகர்களில் ஒருவருக்காவது இது ஒரு தூண்டுதலாக அமையும் என்று!

2011

 இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்


 வாழ்க வளமுடன்!

தமிழ் இணையக் கல்விக்கழகம்

http://www.tamilvu.org/

அறிமுகம்

உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கம்

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தைத் தன்னுள் கொண்டது.

இந்த வலைதள மின்நூலகத்தின் பொருளடக்கம்  பின்வருமாறு:
  • நூல்கள் (LITERATURE):
Ø  இலக்கணம்
Ø  ச‌ங்க‌ இலக்கியங்கள்
Ø  ப‌தினெண்கீழ்க்க‌ண‌க்கு
Ø  காப்பிய‌ங்க‌ள்
                     ச‌ம‌ய‌ இலக்கியங்கள்
                     சிற்றில‌க்கிய‌ம்
                     நெறி நூல்க‌ள்
                     சித்த‌ர் இலக்கியங்கள்
                     20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதை)
                     20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைந‌டை-‍சிறுக‌தை,  
                                                                                  புதின‌ம், க‌ட்டுரை)
                     நாட்டுப்புற இலக்கியங்கள்
                     சிறுவ‌ர் இலக்கியங்கள்  
  • அக‌ராதிக‌ள்(DICTIONARIES)
  • க‌லைக்க‌ள‌ஞ்சிய‌ம்(ENCYCLOPEDIA)
  • க‌லைச்சொல் தொகுப்புக‌ள்(TECHNICAL GLOSSARY)
  • சுவ‌டிக்காட்சிய‌க‌ம்(MANUSCRIPT GALLERY)
  • ப‌ண்பாட்டுக்காட்சிய‌க‌ம்(CULTURAL GALLERY)

இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும் அனைத்து த‌மிழர்களுக்கும்  - என் இனிய வாழ்த்துக்கள். இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம்.

என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

PROJECT MADURAI - ஒரு அறிமுகம்

இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.

மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

LIST OF WORKS:
http://www.projectmadurai.org/pmworks.html

இங்கு அனைத்து தமிழ் நூல்களும்/வாசிப்புகளும் pdf மற்றும் html முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும் அனைத்து த‌மிழர்களுக்கும்  - என் இனிய வாழ்த்துக்கள்.

இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம். என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.

படித்ததில் பிடித்தது - 3

பாரதியார் பாடல்கள் - 3

          தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
   இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
   இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
   பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
   வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
   உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமைய‌ராய்ச் செவிட‌ர்க‌ளாய்க் குருடர்களாய்
   வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
   தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
   தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
   சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
   அதைவ‌ணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
   வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
  கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
  விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
  இங்கமரர் சிறப்புக் கண்டார்.