நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் எனக்கு இவ்வலைபூவை புதுப்பிக்க நேரம் கிடைத்திற்று. வாசகர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு/சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் இணையதளத்தில் உலாவும்போது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒலிப்பேலை (mp3 audio file) கிடைத்தது. சிறுவயதில் எனது அப்பா இப்புத்தகத்தை படித்தது இன்றும் நினைவில் உள்ளது. இதில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
சமீபத்தில் இணையதளத்தில் உலாவும்போது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒலிப்பேலை (mp3 audio file) கிடைத்தது. சிறுவயதில் எனது அப்பா இப்புத்தகத்தை படித்தது இன்றும் நினைவில் உள்ளது. இதில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
சிறு வயதில் நான் எனது அம்மாவிடம் அடிக்கடி கேள்விகள் கேட்பது வழக்கம். அத்தகைய தருணங்களில் அதிக தடவை எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. உதாரணமாக எதற்காக குங்குமமும், திருநீரும் இடுகிறோம்? ஏன் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருவது வழக்கமாக உள்ளது? இதுபோன்ற எண்ணற்ற மதம் சார்ந்த கேள்விகளுக்கு, ஆராய்ந்து தனது பதிலை கவிஞர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் பேசும் பொழுது அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்களையெல்லாம் பார்த்து, "பெரியோர்களே, தாய்மார்களே" என்று அழைத்தார். இதனைக் கேட்ட அங்கிருந்த இளம்பெண்கள் சிலர் சிரித்தார்கள். அதற்கு அவர் சொன்னார் - "நீங்கள் சிரிப்பது எனக்கு புரிகிறது. நீங்களோ இளம் பெண்கள், என்னடா நமக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை, நம்மை இவன் தாய்மார்களே என்று அழைக்கிறானே என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
மேலை நாட்டிலே பெண் என்றாலே மனைவி அல்லது காதலி என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 'பெண்' என்ற பேரைக் கேட்டாலே தாய் என்கிற உணர்வுதான் எங்களுக்கு வரும். "தாய்! தாயே" என்று அழைப்பது எங்கள் லட்சியக் கனவாகும். பதினெட்டு வயது இளம்பெண்ணைப் பார்த்து 80 வ்யது கிளவன் பிச்சைகேட்கும் போதும்கூட ஏன், 7 வயது சிறுமியைப் பார்த்து பிச்சை கேட்கும் போதும்கூட "தாயே பிச்சை போடு" என்று தான் கேட்கிறானே தவிர "சிறுமியே பிச்சை போடு அல்லது குமரியே பிச்சை போடு" என்று கேட்பதில்லை.
எங்களுடைய குடும்பத்தின் லட்சியம், மூலம் 'தாய்'. எவள் இல்லையென்றால் இந்த பூமியிலே நான் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் நான் மீண்டும் அடைய முடியாதோ அவளே என்னுடைய வாழ்க்கையின் தத்துவங்களை துவக்கி வைக்கின்றாள்.
என்னுடைய தாயை நான் வணங்குகின்றேன். எனக்கு வாழ்க்கைக்குத் துணையாக ஒரு மனைவி வந்திருந்திருப்பாலானால் அவளும் அவளை வணங்கியாக வேண்டும். எனக்கு அவள் தருகிற இன்பங்களுக்காக என் தாயின் மீது ஏறி நின்று என் தாயாரை அவள் விலை பேச முடியாது. என்னுடைய தாய் என்பவள் தான் என் குடும்பத்தின் ராணி, அந்த ராணிக்குத் தோழிதான் என் மனைவியே தவிர அந்த மனைவி என்பவள் ராணி என்கின்ற அந்தஸ்த்தைப் பெற முடியாது.
அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் ராணியாக இருக்கலாமே தவிர, என் தாய்க்கு அவள் தோழியாகத்தான் அடங்கி இருக்க முடியும். என் தாயை நான் வணங்கும்போது அவளும் வணங்கியாக வேண்டும். அப்படி அவள் வணங்க விரும்பவில்லையென்றால், என் மனைவியாக அவளை நான் அங்கீகரிக்க மாட்டேன். இதுதான் மேலை நாட்டிற்கும் இந்திய நாகரிகத்துக்கும் உள்ள வித்தியாசம். இந்துக்களுடைய நாகரிகத்தில் தாய் என்கிற ஸ்தானத்திலிருந்தே சகலமும் ஆரம்பமாகின்றன" என்று சுவாமி விவேகானந்தர் அங்கே கூறினார்.
தாய் நம்முடைய பிறப்பிற்கு மூலமும் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்த உண்மை எது? "தாய்", அவள் மட்டுமே. இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பதை மட்டுமே நாம் அறிவோம். தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம். தகப்பன் கொண்டுபோய் உட்கார வைத்து "அரி நமத்து சிந்தம்" (pl check) என்று எழுதச் சொல்லும் போதுதான் நாம் குருவை அறிவோம். 'அன்பே கடவுள், அறிவே தெய்வம்' என்று சொல்லிக் கொடுத்த பின்னாலே தான் நாம் தெய்வத்தை அறிவோம். அதனாலே தான் சுருக்கமாக நான்கு சொற்களை வைத்து 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சொன்னார்கள்.
இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாகத் தெரிந்த ஒரே உண்மை - மாதா, சந்தேகத்திற்கு இடமாக இருப்பது தெய்வம். சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்திற்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும். இவர்கள் இருவர் பற்றியும் சந்தேகம் எழலாம், இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தெய்வம் முழுக்க சந்தேகத்திற்கு உரியது, ஆனால் அடையும் போது அது முழுக்க உண்மையானது . "மாதா" சந்தேகத்திற்கே இடமில்லாதது. அவளிடமிருந்தே நம்முடைய ஜனனம் ஆரம்பமாகிறது.
ஜனனம் ஆரம்பமாகும் போது இந்த தாயினுடைய வயிற்றில் நாம் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வரம் வாங்கிப் பிறப்பதில்லை. அந்த இருவருடைய சந்தோஷத்தின் பலனாக ஆண்டவன் நம்மை அனுப்பி வைக்கிறான். அதனாலே தான் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என்று அழைக்கிறார்கள் இந்துக்கள்.ஆண்டவன் கொடுத்ததா! பிறகு தாய் தந்தையர் நிலை என்ன என்று கேள்வி கேட்கின்றவர்கள் இதை அறிய வேண்டும். தாய் தந்தையினுடைய விருப்பத்தின் படி ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறக்கவில்லை. ஆண்டவனுடைய விருப்பத்தின் படியே நாம் பிறக்கிறோம். அதற்கு இரண்டு கருவிகள் தான் தாயும் தந்தையுமாவர்.
ஜனனம் நமக்கு சர்வ நிச்சயமாக கிடைத்துவிடுகிறது. எந்த ஒரு குழந்தை பிறப்பதானாலும் கூட பத்தாவது மாதம் அந்த குழந்தை பிறக்கும் என்று ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. பெரிய பெண்ணாக வளருகிற ஒரு பெண் 16 வயதிலேயும் வரலாம் அல்லது 18 வயதிலேயும் வரலாம், ஆனால் குழந்தை என்பது 10 மாதங்களிலே தான் பிறக்கும் என்கின்ற ஒன்றுதான் உலகத்தில் உண்மை.
அதன் பின்னால் மரணம் என்பது இன்ன தேதியில் தான் வரும் என்று யாருக்கும் நிச்சயமான டைரி கிடையாது.
(தொடரும்)