எனைத் தொலைத்த நாட்கள்

 

மௌனம் பேசும் வார்த்தைகள்

தொலைந்து நின்ற தருணங்கள்

கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள்

கனவில் கலந்த ரகசியங்கள்

உள்ளம் கேட்கும் ஓசையில்

அடங்கிப் போகும் - உனக்குள்

எனைத் தொலைத்த நாட்கள்!

 

தீண்டல்


ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம்

செல்லக் குழந்தையின்  சிணுங்கல்

ஓய்ந்த ஆழியின் நிசப்தம்

இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று

மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள்

பூரணம் உணர்வாய்

-        - இத்தீண்டலில் பெண்ணே!