பாரதி (யார்?)




எட்டையபுரத்தில் உதித்தான் - இவன்
சுடர்மிகு அறிவுடையான்
தமிழ்ப் பயின்றான்! 

அவ்வை வழிநின்றான்
தமிழமுதின் சுவைகண்டான்
மானுட வாழ்வின் வழியுரைத்தான்!

விடுதலை வேட்கையுடையான்
சிறை சென்றான்!
கேலிச்சித்திரம் தீட்டினான்!

கம்பன் வள்ளுவன் இளங்கோ கண்டான்
தெருவெல்லாம் தமிழ் முழக்கமிட்டான்
 
காக்கைச் சிறகென்றான், தீக்குள் விரல் வைத்தான்
அற்ப மாயை யறிந்தான்!

அறிவே ஒளியென்றான்!
உண்மையே தெய்வமென்றான்!

மரமென்றான், விலங்கென்றான், தான் மண்ணில் வாழும் புழுவென்றான்!
அஃறிணையும் தானென்றான்!

அச்சம் தவிர் என்றான்!
சாதி இல்லையென்றான்!

ஆண் பெண் நிகரென்றான்!
புதுமைப் பெண் கண்டான்!

ரௌத்திரம் பழகென்றான்!
காலனை கால்மிதித்தான்!

பிறமொழி ஆதரித்தான்
இறவாத புதுநூல்கள் தமிழில் இயற்றக் கேட்டான்

வாழ்த்தினான், நம்
செந்தமிழை வணங்கினான்


- இவனே நான் கண்ட பாரதி (தீ)

No comments:

Post a Comment