இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம்
பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக்
குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம்
கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின்
உயர்வைச் சுட்டுகிறது.
இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”,
இடக்கு
அடக்கல்
என்பது “அடக்கி”
அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத
சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது
‘நாசுக்காக’ கூறுவது.
எ.கா.
(*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’
என்று கூறுவது வழக்கம்.
(*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “வெளியே போனான்”
அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது
(*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர்
(*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான்
ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்(euphemism) என்பர்.
E.g.
(*) kick the bucket – the death of a person
(*) downsizing - firing employees
(*) special child- disabled/ learning
challenged
இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார்) என்பது இடக்கரடக்கல் அல்ல, அது 'மங்கலம்' என்ற பிரிவுக்குள் அடங்கும். மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.
விளக்கம் ரசிக்க வைத்தன நண்பரே...
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDeleteபாராட்டுகள்
அருமை
ReplyDelete