வாழ்வில் முதலில் வாங்கிய, பார்த்த, ரசித்த, பழகிய அனுபவங்கள் நமக்கு கண்டிப்பாக ஞாபகம் இருக்கும். அதுவும் முதல் சம்பளத்தில் வாங்கியது நன்றாகவே ஞாபகம் இருக்கும். யோசித்துப்பார்த்தால் வழக்கமாக அனைவரும் கண்டிப்பாக ட்ரஸ் அல்லது ஸூ,/செப்பல் வாங்கிருப்போம்.
நான் என் முதல்
மாத வருமானத்தில் வாங்கியது கைபேசி (cellphone) SAMSUNG C100, 10 வருடங்களுக்கு
முன் வாங்கியது. இன்றும் நினைவில் உள்ளது. இந்த பத்து வருடத்தில் கைபேசியயில் தான்
எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. அலைப்பிற்காக தொடங்கப்பட்டது இன்று music,
camera, internet , whatsapp, FB, games, mobile banking, gps, email என்று வளர்ந்துள்ளது.
வாங்கிய புதிதில்
என் நண்பர்கள் அனைவரும் வாங்கிப்பார்ப்பார்கள், எங்க வாங்கின, எவ்வளவு ரூபாய்
என்று ஆர்வமாக கேட்பார்கள். கலர் டிஸ்ப்லே, சைட்ல க்ரீன்/ப்ளு LED லைட் ப்ளிங்க
ஆகும். அப்போதெல்லாம் நோ மெமரி ஸ்லாட், நோ Wifi, Bluetooth. மொத்தமாக 5 அல்லது 6
வால்பேப்பர்கள் இருக்கும்.
ட்ரெய்னிங்
நேரத்தில் வால்பேப்பர் மாற்றுவது, தினசரி ரிங்டோன் மாற்றுவது, மெசேஜ் வந்துள்ளதா
அல்லது கால் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்ப்பது தான் முழுநேர வேலையாக இருக்கும்.
அழைப்பு வந்திருக்காது இருந்தும் ஆர்வக்கோளாரால் கைபேசியையே பார்த்துக் கொண்டே
இருப்பேன். தினமும் இரண்டு மணிநேரம் கண்டிப்பாக சார்ஜ் செய்வேன்.
ஏறக்குறைய இரண்டு
வருடங்கள் வைத்திருந்தேன், பின் வேறொரு புதிய கைபேசி வாங்கினேன். இப்போதெல்லாம்
கைபேசி என்பது வாழ்வின் ஒரு இன்றியமையாத பொருளாக உள்ளது. இன்று ஐந்து
வயதுக்குழந்தையிலிருந்து அனைவரிடத்திலும் கைபேசி உள்ளது.
தகவல்
தொழில்நுட்பம் ஒரு புறம் வளர்ந்துகொண்டு சென்றாலும் அதனால் விளையக்கூடிய தீமைகளும்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றன!
No comments:
Post a Comment